ரஞ்சித் 2002 இல் சன் டிவியின் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் தனது மெய்சிலிர்க்க வைக்கும் பாடும் திறமையால் இறுதி நிகழ்ச்சிக்குச் சென்று, வெற்றியாளராக வெளிப்பட்ட பிறகு, பின்னணிப் பாடகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
ரஞ்சித் ஒரு பயிற்சி பெற்ற கர்நாடக பாடகர். புகழ்பெற்ற இசை குருக்களான PS நாராயண சுவாமி, வித்வான் ஸ்ரீ கடலூர் சுப்பிரமணியம், ஸ்ரீ KS கனகசிங்கம் மற்றும் ஸ்ரீ திருச்சூர்.பி ராமன்குட்டி ஆகியோரின் வழிகாட்டலில் தனக்கென ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளார். அவரது இசைப் பாணியானது ராக், கிளாசிக்கல், RnB,அல்ட்டர்நேட்டிவ் ராக், ஹிப்-ஹாப், நாட்டுப்புறபாட்டு & EDM ஆகியவற்றைத் தழுவியிருக்கும். ரஞ்சித் முறையே ஸ்ரீ கேதார் காரத் மற்றும் திரு அகஸ்டின் பால் ஆகியோரிடம் இந்துஸ்தானி கிளாசிக்கல் மற்றும் மேற்கத்திய பாரம்பரிய இசையையும் கற்றுள்ளார்.
பியானோ, கிட்டார் மற்றும் மிருதங்கம் போன்ற இசைக்கருவிகளில் ரஞ்சித் கொண்ட திறமையானது, பின்னணிப் பாடல் மற்றும் கிளாசிக்கல் கச்சேரிகளிலிருந்து இண்டிப்பென்டென்ட் பாடல்கள் மற்றும் ஜிங்கிள்களை உருவாக்குவது வரை அவரது இசை எல்லைகளை விரிவுபடுத்த உதவியது. இசை ஜாம்பவான்களான இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், மணி ஷர்மா, வித்யா சாகர், பரத்வாஜ், யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, டி.இமான், அனிருத், ஹாரிஸ் ஜெயராஜ், எஸ்.ஏ.ராஜ்குமார், தமன்.எஸ், சுந்தர், தீபக் தேவ், ஓசேப்பச்சன் மற்றும் எல்லா காலத்திலும் பல புகழ்பெற்ற இசைக்கலைஞர்களுடன் பணிபுரியும் வாய்ப்பையும் பின்னணிப் பாடகரான அவரது பயணம் அவருக்கு அளித்துள்ளது.